×

குஜராத் கலவரம் தொடர்பான வழக்கு டீஸ்டா செடால்வட்டின் இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: குஜராத் கலவரம் தொடர்பாக பொய் ஆதாரங்கள் மற்றும் சாட்சிகளை உருவாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் சமூக ஆர்வலர் டீஸ்டா செடால்வட்டை கைது செய்வதில் இருந்து அளிக்கப்பட்ட பாதுகாப்பை உச்ச நீதிமன்றம் வரும் 19ம் தேதி வரை நீட்டித்துள்ளது. கடந்த 2002ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்தை தொடர்ந்து, அந்த வழக்கில் பிரதமர் மோடி உள்ளிட்டோரை சிக்க வைப்பதற்காக பொய் சாட்சிகள் மற்றும் ஆதாரங்களை உருவாக்கியதாக சமூக ஆர்வலர் டீஸ்டா செடால்வட்டை குஜராத் போலீசார் கைது செய்தனர். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடியதைத் தொடர்ந்து அவர் இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்கில் வழக்கமான ஜாமீன் கோரி டீஸ்டா செடால்வட் தொடர்ந்த வழக்கை விசாரித்த குஜராத் உயர் நீதிமன்றம், கடந்த 1ம் தேதி அவரது மனுவை தள்ளுபடி செய்து உடனடியாக சரணடைய உத்தரவு பிறப்பித்தது. இதனால் கைதாகும் சூழலில் டீஸ்டா செடால்வட் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடினார். இதில், டீஸ்டா செடால்வட் கைதாவதில் இருந்து ஒருவாரத்திற்கு பாதுகாப்பு அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த மவழக்கு நீதிபதிகள் பி.ஆர்.கவாய், போபண்ணா, திபன்கர் தத்தா ஆகியோர் கொண்ட அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, குஜராத் அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பிய நீதிபதிகள், வழக்கை வரும் 19ம் தேதிக்கு ஒத்திவைத்து, அதுவரை டீஸ்டா செடால்வட்டுக்கு வழங்கப்பட்ட இடைக்கால பாதுகாப்பை நீட்டித்து உத்தரவிட்டனர்.

The post குஜராத் கலவரம் தொடர்பான வழக்கு டீஸ்டா செடால்வட்டின் இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Gujarat riots ,Teesta Sedalwat ,Supreme Court ,New Delhi ,Gujarat ,Dinakaran ,
× RELATED உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள்...